அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது-தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.


தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.


அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது.


அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.


அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.


பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.