யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்: பிப்.5-இல் சிறப்பு வகுப்புகள்


 யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்: பிப்.5-இல் சிறப்பு வகுப்புகள்பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி, யுபி எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.5) நடைபெறவுள்ளது. சென்னை ஈவிசேசம்பத் சாலையில் உள்ள வேப்பேரி பெரியார் திட லில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெரியார் ஐஏ எஸ் அகாதெமியில் நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப் படவுள்ளது. இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர் வுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டயுபிஎஸ்சி தேர்வுகள் குறித்த சந்தே கங்களைத் தீர்வு காண்பது, விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்யும் முறை, போட்டிக்கு எவ்வாறுதயார் செய்வது போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்புக் கருத்த ரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.5) நடை பெறவுள்ளது.

காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை டிஎன்பிஎஸ் சி.க்கான வகுப்புகளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை யுபி எஸ்சி.க்கான வகுப்புகளும் நடைபெறும். இந்தக் கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாண வர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் இருக்கைக்கு 044-26618056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.