தமிழகத்தில் 10 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை தேர்தல் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும் என நமது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் மேலும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரும் நீட் மற்றும் ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை அதனால் தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .மேலும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நமது பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment