பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும்!

  பொங்கல் விடுமுறைக்கு பின் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து வரும் எட்டாம் தேதி வரை பெற்றோரிடம் என்னும் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தீரஜ்த குமார் தலைமையில் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. பொங்கல் விடுமுறைக்கு பின் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல்கட்டமாக பள்ளிகளை திறக்க பரிசீலனை செய்யப்பட்டது இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று மாலை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்கள் தயார் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். எனவே பள்ளியைத் திறந்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டியது இன்றியமையாததாகும். எனவே பொங்கல் விடுமுறை முடிந்த பின் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 8ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கேட்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தலைமையாசிரியருக்கு உரிய வழிகாட்டுதல்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் நிர்வாகிகள் கருத்து கேட்க வேண்டும் .கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் எனவே எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

 அதில் கூறியிருப்பது வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.   மாணவர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி அவர்களை அமர வைக்க வேண்டும்.

. மேலும் தனியார் பள்ளிகள் பள்ளிக் கல்வி அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளிக்கு வர பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சுகாதாரத்துறை வழியே வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு தற்போது பயன்படுத்த வேண்டாம் எனவும் பள்ளி வளாகத்தை கொரோனா தொற்று தடுப்பு முறைப்படி சானிடைசர் பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   அவசர உதவி மற்றும் மருத்துவ உதவி அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தொலைபேசி எண் போன்ற விவரங்களை பள்ளியில் பட்டியலிட்டு வைத்திருக்க வேண்டும் என்றும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .பள்ளி வளாகங்களுக்கு மாணவர்கள் வரவும் வெளியேறவும் ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருக்க வேண்டும் எனவும் வானிலை சரியாக இருந்தால் வெளியில் மரத்தடியில் பாடங்களை நடத்தலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் விளையாட்டு என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற நடவடிக்கைகள் தற்போது அனுமதி அளிக்க கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் கூட்டம் கூடுவதையும் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.