பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு !

12ஆம் தேதி முதல்19ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று சென்னனயில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார் .  சுமார் 30,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இருந்து 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .அதன்படி ஆந்திரா செல்லும் சிறப்பு பேருந்து மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து

, திருவண்ணாமலை செல்லும் பேருந்து தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும்,

 விக்கிரவாண்டி ,பண்ருட்டி வழியாக கும்பகோணம் ,தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்,

 கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவித்துள்ளார் 

.மேலும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி ,ஆற்காடு, திருப்பத்தூர் செல்லும் பேருந்துகளும்

 மதுரை நெல்லை கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்

. இதேபோல் பொங்கல் பண்டிகையை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான முன்பதிவு வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.