பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு.

தமிழகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதோ  உங்களுக்காக

1 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 50, 68 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் .

2 கல்வித் துறையில் காலியாக உள்ள அமைச்சுப் பணியிடங்களை இடங்களை நிரப்ப வேண்டும்.

3  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சிலில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போல பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

4  பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

 என்பது உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சந்தித்து மனு வழங்கும் போராட்டம் நடத்தப்படும் .அதற்கு பிறகு பிப்ரவரி 12ஆம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.