72 ஆவது குடியரசு தின விழா - முக்கியமான ஒருவரை பற்றி தெரிந்து கொள்வோம் - நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்
நம
மது நாட்டின் 72 ஆவது குடியரசு தின விழாவை
கொண்டாட போகும் நாம், இந்த நேரத்தில்
முக்கியமான ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள
வேண்டியது மிகவும் அவசியம். இன்று கல்வியிலும்,
அனைத்து துறைகளிலும் பல சிறப்புகளை பெற்று
வரும் பெண்கள், அன்றைய நாட்களில் பெரும்பாலும்
கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அதிலும்
சாதிய பாகுபாடுகள் காரணமாக, கல்வி வாசனையே
காட்டப்படாமல் பல பெண்கள் இருந்தனர். அத்தகைய
பெண்களுக்கெல்லாம் கல்வி கிடைக்க வழி செய்தவர்
தான், சாவித்திரிபாய் புலே.
'அனைவருக்கும் கல்வி', 'பெண்களுக்கு கல்வி'
என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண்
விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின்
முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு
நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர்.
மகாராஷ்ட்டிராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்
தப்பட்ட வகுப்பிலே பிறந்தார். ஜோதிபாய் புலே எனும்
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர், இவரின்
கணவர் ஆனார். அவர் இவருக்குக் கல்வி பயிற்று
வித்தார். கற்றுத்தேர்ந்ததும் “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
மறுக்கப்பட்ட கல்வியை நாமே தருவோம்” என்று ஒரு
பள்ளியை தொடங்கினார் (ஜோதிபாய். அதில் இந்தியா
வின் முதல் பெண் ஆசிரியராக ஆனார் சாவித்திரி
புலே.
அந்நாளில், சிறுவயதில் விதவையான பெண்களின்
தலையை மொட்டையடிக்கும் கொடிய நடைமுறை
வழக்கத்தில் இருந்தது; அந்தப் பணியைச் செய்யும்
மக்களை வைத்தே, “அதை நாங்கள் செய்யமாட்டோம்”
என அறிவிக்கச் செய்தார். விதவை மறுமணங்களை
தொடர்ந்து நடத்திக்காட்டினார்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண்
ணைக் காப்பாற்றி, அவருக்கு பிறந்த குழந்தையைத்
தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார்.
0 Comments
Post a Comment