தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம்! 

  தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் ஜனவரி மாதங்களில் கடுமையா பனிப்பொழிவு தான் இருக்கும் ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் நல்ல மழை பெய்து வருகிறது.

 சென்னையில் விடாமல் மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது. மழைக்காலத்தில் போன்று மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது அதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது .

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11ஆம் தேதி  வரை 5 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.