உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு நேபாள அரசு அறிவிப்பு!

  உலகிலேயே மிக உயர்ந்த சிகரம்மாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் கடந்த 1954ஆம் ஆண்டு இந்த சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது அப்போது சிகரத்தின் உயரம் 8,844,43 மீட்டர் இருப்பதாக  அறிவித்தது. இதற்கிடையே நேபாளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என பல சர்ச்சைகள் எழுந்தன, 

தொடர்ந்து சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்ய நேபாள அரசு முடிவு செய்து அதன்படி சீனா ,நேபாளம் ஒன்றிணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மறு அளவீட்டுபணியை தொடங்கி தற்போது நிறைவு பெற்றதை தொடர்ந்து  எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 86 சென்டிமீட்டர் அளவுக்கு புதிய உயரம் அதிகமாக இருப்பதாகவும் எனவே இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848,86 மீட்டர் என நேபாள அரசு அறிவித்துள்ளது.