புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

 நமது தமிழ் செய்தி வலைதளத்திற்கு கிடைத்த தகவல் இதோ: குடியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரங்கள் இதோ: 

 தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011ல் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் தொடக்கப்பள்ளி  வசதியும், மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள் நடுநிலைப்பள்ளியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

 பள்ளி வசதியில்லாத குடியிருப்புகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கட்டமைப்பில் கூறி உள்ளவாறு புவியியல் தகவல் முறைமை மற்றும் கள ஆய்வு மூலம் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது .இந்தக் குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021 மற்றும் 2022-ல் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் மற்றும் பள்ளி வரை பட பயிற்சி மூலம் பெறப்பட்ட உள்ளது.

 அதன்படி குடியிருப்பிற்கு அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உயர்நிலைப்பள்ளி இல்லை என்றால் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், 8 கிலோமீட்டர் தொலைவில் மேல்நிலைப் பள்ளி இல்லாத நிலையில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தலாம், என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் எட்டாம் வகுப்பில் 70 மாணவர்களுக்கு குறையாமல் சேர வாய்ப்பு உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் பெண்கள் பள்ளிகளை தரம் உயர்த்தலாம். போக்குவரத்து வசதியில்லாத மற்றும் பள்ளி வசதியில்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயில உண்டு உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.

 இந்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்களில் வட்டார வளமையங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

 பொதுமக்களின் பங்களிப்பு பின்வருமாறு: 

 நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த் பொதுமக்களின் பங்கு தொகையை ஒரு லட்சமும், உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்களின் பங்களிப்பு ரூபாய் 2 லட்சமும் அரசு கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.