ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!
நமது வளைதளத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சார்ந்த தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது பார்த்து பயனடையுங்கள் .தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ஏமிஸ் என்ற இணையதளம் மூலம் பெயர், முகவரி ,இரத்த வகை, புகைப்படம் உள்ளிட்ட சேகரிக்கப்பட்டன.
முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது .தற்போது முதல் கட்டமாக 12,906 காடுகள் தயாரிக்கப்பட்ட நிலையில் அதனை மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
.மேலும் பள்ளி திறக்கும் பொழுது ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வரும் பொழுது ஸ்மார்ட் கார்டு கட்டாயம் அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
0 Comments
Post a Comment