தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விளக்கம்

! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் இன்று மேற்கொண்டார் இன்று காலை அரியலூரில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த  ஆய்வு செய்த நிலையில் பெரம்பலூரில் ஆய்வு  மேற்கொண்டார்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா பாதிப்பு குறையும்போது பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பெற்றோர்களின் கருத்தை அறிந்து தான் பள்ளிகள் திறப்பு குறித்த ஒரு முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.