அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் BC மற்றும் MBC மாணவ ,மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

:பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகள் ,அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார் .மேலும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கு வருகிற 31-ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

.இந்த கால நிர்ணயத்துக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எந்தவித கெடுதலும் இன்றி புதுப்பித்தல் இனங்காண விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  தகுதி உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.