தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 2,500 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அறிவித்தார் .அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது

. இந்த வருடம் பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

 பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்றும் ,வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்ட பின்னர் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும்,யார் எந்த தேதியில்  ரேசன் கடைகளில் வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்றும் அந்த தேதியில் ரேஷன் கடைகளில் அவரவர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.