தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் தொடரும் கனமழை!

 தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது .இந்த நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

. மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவிழந்து வருகிறது இது தற்போது வளிமண்டல சுழற்சி ஆக அதே பகுதியில் நிலவி வருவதால் அதன் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே நெல்லை ,தூத்துக்குடி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.