ஜனவரி 1 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! எங்கு தெரியுமா? 

 கர்நாடகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில்  பள்ளிகள் திறப்பது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா ,மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் ,சுகாதாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் ரவிக்குமார் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 அதன் பின்னர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பள்ளிகளில் வருகை பதிவு கட்டாயம் இல்லை என்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்காக இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து படிப்படியாக ஆலோசனை நடத்தி அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 பள்ளி திறப்பதற்கு முன்பாக பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் .

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து, கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளி யுடனும் வகுப்பறையில் இருக்க வேண்டும் எனவும்  கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.