தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்_StaffFixation_CEO செயல்முறைகள்.

 திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் ,பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ,மற்றும் திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையில் பதிவேற்றம் செய்து கீழ்காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் EMIS ல் பதிவேற்றம் செய்து மாணவர்களின் எண்ணிக்கை விவரப்பட்டியல் EMIS ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நியமனம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் EMIS ல்பதிவேற்றம் செய்யும் போது அதைச் சார்ந்த ஆசிரியர்களின் பாடங்களை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பாடங்களின் உட்பிரிவு கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய கூடாது .(இயற்பியல் வேதியல் உயிரியல் விலங்கியல் வரலாறு புவியியல்)

மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரியும் ஆசிரியரின் மாற்றுத்திறனாளி சான்றினை இரண்டு நகல்கள்  தலைமை ஆசிரியர்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.