பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

 காற்று மாசு அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .பிரிட்டனில்  வரும் 2030ஆம் ஆண்டு முதல் டீசல் மற்றும்  பெட்ரோல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

.பிரிட்டன் சாலையில் லட்சக்கணக்கான பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தினமும் வந்து சென்று கொண்டிருப்பதால் காற்றுமாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து 2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார் விற்பனைக்கு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் முக்கிய பத்திரிக்கை செய்தி ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

.பத்து ஆண்டுகளில் பிரிட்டன் நாட்டில் ஒட்டுமொத்தமாக டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதால் பெட்ரோல் டீசல் கார்களின் விலை மந்தமாகும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது தமிழ் செய்தி இணைய தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!