கல்வி ஆண்டு ஜூலை வரை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்?

  கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக அனைத்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் ஆனது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது .இதனை கருத்தில் கொண்டு இந்த கல்வி ஆண்டு ஜூலை வரை நீடிக்கலாம் என பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது

.கொரோனா தாக்கம்  சற்று குறைந்து கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளார்கள். ஆனால் பள்ளி கல்லூரிகளைத் திறப்பது மட்டும் தள்ளிப் போடப்பட்டு உள்ளது .இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கல்வி ஆண்டில் பின்பற்றப்படும் அட்டவணைப்படி பாடங்களை நடத்த முடியவில்லை என்றும், கல்வி ஆண்டு கணக்கில் ஜீன்முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் திட்டமிட்டபடி பாடங்களையும் ,தேர்வுகளையும்,நடத்த முடியாத சூழல் தற்போது நிலவி வருவதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


எனவே இந்த கல்வி ஆண்டு கூடுதலாக மூன்று மாதங்கள் எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதில் ஜூலை வரை நீடிக்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையையும் கருத்தில் வைத்து மத்திய கல்வி அமைச்சகத்திடம் இதைப்பற்றிய ஒரு விளக்கத்தை பெற்ற பிறகு இந்த கல்வி ஆண்டு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் .என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன நன்றி.