இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெண் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு! 

 டெல்லியில் காணாமல் போன  76 குழந்தைகளை மூன்று மாதங்களில் கண்டுபிடித்துக் கொடுத்த பெண் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 டெல்லியின் சமாய்பூர் பதலி  காவல் நிலைய பெண் தலைமை கான்ஸ்டபிள் மூன்று மாதங்களில் சுமார் 76 காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்துள்ளார் 

.இந்த குழந்தைகளில் 56 குழந்தைகள் 7 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் டெல்லி மாநகர காவல் ஆணையர் பதவி உயர்வை வழங்கினார்.

 இந்த பதவி உயர்வு மூலம் டெல்லி காவல் துறையில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 76 குழந்தைகளை மூன்று மாதங்களில் கண்டுபிடிப்பதற்கான உதாரணம் மூலம் பதவி உயர்வு பெற்ற முதல் பெண்  காவலர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த காவலருக்கு பொதுமக்கள் பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வண்ணம் உள்ளார்கள்.