அரசு பணியாளர், மற்றும் ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடக்கம் :

*அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சட்டமன்றத் தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தற்போது தமிழக அரசு விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . 

*தேர்தலை முழுமையாக நடத்தி முடிப்பவர்கள் அரசு துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள்மற்றும் அலுவலக
 ஊழியர்கள் தான். வாக்குச்சாவடிகளில் முக்கிய பணிகளில் ஆசிரியர்களை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன 

*.இதற்காக விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.  

*அடுத்தாண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.