அனிஷா உமாசங்கர் என்ற மாணவிக்கு சுவீடன் விருது. தமிழக முதல்வர்  ட்விட்டரில் வாழ்த்து:

 இளம் தலைமுறை மாணவர்கள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த அனிஷா உமாசங்கர் என்ற மாணவி சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் .

ஸ்வீடன் நாட்டில் சூழலியல் அறக்கட்டளை சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர் என்ற விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் பதக்கம்,பட்டயம் மற்றும் இந்திய மதிப்பில் ரூபாய் 8 லட்சத்து 63 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிஷா உமாசங்கர் என்ற மாணவி இதைப் பற்றிக் கூறுகையில் இந்த உதவித்தொகை தன்னுடைய வருங்கால கண்டுபிடிப்புகளுக்கு மிகவும் பயன்படும் என தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அனிஷா உமாசங்கர் என்ற மாணவியை தமிழக முதல்வர் திரு எடப்பாடி  பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.!