தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை!

  • தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில்
  •  மிதமான மழையும் ஒரு சில இடங்களில்  கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 14 ஆம் தேதி வரை பரவலாக இடி மின்னலுக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முதல் இடியுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  •  சென்னையை பொருத்தவரை இன்று பல இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
  • இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் 11-ஆம் தேதிக்கு மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் எனவே மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும்  சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.