உலகத்தில் மிகப்பழமையான
பத்து மொழிகளை  வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

உலகில் பேசப்படும்/பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்..

( 10) வது இடத்தில் இலத்தீன் மொழி (Lattin)

ரோமாபுரி பேரரசில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அது கி.மு. 75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

( 9) வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

( 8) வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

( 7) வது இடத்தில் எபிரேய மொழி ( Hebrew )

இசுரேலில் அங்கீகாரமுள்ள மொழியான,
எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

( 6) வது இடத்தில் அராமிக் மொழி ( *Aramaic)

அரபு மொழி,
எபிரேய மொழி
ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி
அராமிக் மொழியென்று
. இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

( 5) வது இடத்தில்
சீன மொழியான பழைய மாண்டரின் மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி அதாவது பழைய மாண்டரின் மொழி,
கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

( 4) வது இடத்தில் கிரீக் (Greek) அதாவது பழைய கிரேக்க மொழி.

கிரேக்க பேரரசு ஆட்சியின் கீழிறந்த தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்  கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

( 3) வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி,
கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

( 2) வது இடத்தில் சமற்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான கலவை மொழியான சமற்கிருத மொழி, .

அதாவது தமிழ் மொழியின் உதவியை கொண்டே  சமற்கிருத  மொழியின் பெரும்பகுதி உருவாக்கப் பட்டுள்ளது
 என்பதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆதாரப்பூர்வமாக நிருபித்து உள்ளார்.

அத்துடன்
எட்டு அடிப்படை சிற்பபு தகுதிகள்
இருந்தால்
 மட்டுமே அந்த மொழியானது செம்மொழியாக முடியும்.

ஏழு தகுதிகள்  மட்டுமே கொண்ட சமற்கிருத மொழி எந்த அடிப்படையில் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது  ¡

சமற்கிருத மொழி
கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

( 1) வது இடத்தில் தமிழ் மொழி ( Tamil)

50, 000 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே
 முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் மொழியில் மட்டுமே
16 தனிப் பெறும் சிறப்புக்கள் உள்ளதை
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
 உட்பட மொழியியல் அறிஞர்கள் தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்கள்.

தமிழ் மொழிக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

16 பதினாறு தகுதிகளுடன் மேலும் இரண்டு தகுதிகளும் சேர்த்து
18 பதினெட்டு தனிப் பெரும்  சிறப்புக்களை கொண்டது  தமிழ் மொழி என்பதை
 சமீபத்தில் மொழியியல் அறிஞர்கள்  கண்டறிந்து நிறுவியுள்ளார்கள்.

ஆயினும்
இவ்வளவு சிறப்புக்குரிய
தமிழ் மொழியில்
இன்று வரை பெரும்பாலான கோயில்களில்
வழிபாடு செய்ய முடியவில்லை அத்துடன் தமிழில் வழிபாடு செய்ய
அனுமதிக்கப் படுவதும் இல்லை.

வாசகர்கள்,
எழுத்தாளர்கள்,
கவிஞர்கள்,
தமிழாசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள்
இப்படி இன்னும் பல துறையினரும்
திருமணம்,
கிரகப் பிரவேசம், இறப்பு உள்ளிட்ட தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை தங்களது தாய் மொழியான
தமிழ் மொழியில் செய்வதற்கு
மாறாக
சமற்கிருத மொழியில் செய்கிறார்கள்.

ஆனால்
திருமணம்,
கிரகப் பிரவேசம்,
இறப்பு உள்ளிட்ட
தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை
சீனர்கள், சப்பானியர்கள்,
ஆங்கிலேயர்கள் தங்களது தாய் மொழியிலேயே செய்கிறார்கள்.

ஆனால்
தமிழர்களோ
திருக்குறள்,
தொல்காப்பியம்
வகுத்த நெறியில்
தங்களது தாய் மொழியான
தமிழ் மொழி யில்

செய்யாமல்
அதற்கு மாறாக
சமற்கிருத மொழியிலேயே
செய்து

தங்களது அடிமைத்தனத்தை காண்பித்து
வருங்கால தலைமுறையையும்,
சமற்கிருத அடிமை தலைமுறையாக உருவாக்கி வருகிறார்கள்.

- படித்தேன், வருத்தத்துடன் பகிர்ந்தேன்!

திருவாரூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..
ஒரு கலைஞன் இருப்பான்

அவனுக்கு கணிதம் தேவைப்படாது. அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான் அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான் அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான் அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..

எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

படித்ததில் பிடித்தது  🍀