காலை வழிபாட்டுச்  செயல்பாடுகள்
23-12-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்

குறள்எண்- 785

அதிகாரம் : நட்பு

 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.

பொருள்:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

விருப்பத்துடன் படின்றால் கற்பனைத்திறன் வளரும். கற்பனைத்திறன் வளர்ந்தால் கருத்து மிளிரும். கருத்து மிளிர்ந்தால் அறிவு ஒளிரும். அறிவு ஒளிர்ந்தால் நாடு முன்னேறும், நாடு முன்னேறினால்  அனைவரின் வாழ்வும் செழிக்கும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி 
Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Ellipse - நீள்வட்டம்
2. Emblem - அடையாளம்,சின்னம்
3. Enmity -  பகைமை
4. Envelope - கடித உறை

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.கப்பலின் வேகத்தை அளக்கும் கருவி எது ?

 நாட்

2. இடி தாங்கியைக் கண்டுபிடித்தவர் யார் ?

 பெஞ்சமின் பிராங்க்ளின்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான். அவன் யார் ?

 கரும்பு

2. பிடுங்கலாம் , நடமுடியாது, அது என்ன ?

 தலைமுடி

✡✡✡✡✡✡✡✡
Daily English
1. There were books lying about on the floor.
2. There is a mirror above the wash basin.
3. He was injured in a bus accident.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

அன்னாசிப்பழம்

🍍 எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

🍍 இது பிரமிலசே இனத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.

🍍அன்னாசி என்ற பெயர் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது.

🍍தற்போது அன்னாசி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

மூதாட்டிக்கு அளித்த ஒரே வரம்

ஒரு ஊரில் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளுக்கு சேவை செய்த மூதாட்டி ஒருத்தியின் கனவில் பெருமாள் தோன்றினார். பாட்டி உன் இளமை முதலே நீ என் மீது கொண்ட பக்தியை மெச்சினேன். விரும்பிய வரம் தருகிறேன், கேள்! என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் பாட்டிக்கு மனம் இளமையாகவே இருந்தது.

மூதாட்டி, ஏழாவது மாடியில் நின்று கொண்டு என் எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால் சாதம் சாப்பிடுவதை என் கண்களால் காண வேண்டும், என்றாள். பெருமாளும் பலே பாட்டி, பலே என்று மகிழ்ந்து வரம் கொடுத்து விட்டார். காரணம் பாட்டி, தன்னுடைய எல்லா விதமான ஆசைகளையும் ஒரேயடியாகச் சொல்லி விட்டது தான்.

நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறாய். அதுவும் மாடியில் படியேறிச் சென்று பார்க்கும் விதத்தில் உடலில் பலம் வேண்டும் என்கிறாய். ஏழுமாடி வீட்டுக்குச் சொந்தக்காரியாக வாழும் செல்வ வளமும் வேண்டும் என விருப்புகிறாய். எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால்சாதம் சாப்பிடும் அளவுக்கு வீட்டில் சுபிட்சமும் நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறாய்.

கீழ் தளத்தில் நடப்பதை, ஏழாவது தளத்தில் நின்று பார்க்கும் விதத்தில் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என விரும்புகிறாய்! இத்தனையையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டாயே! என்று பாராட்டி வரத்தையும் கொடுத்து விட்டார். குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும், எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.

🔮43 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டின் முதல் பிரதமராக மார்ரீரோ க்ரூசை நியமனம்: கியூபா தேசிய சபையும் ஒப்புதல்.

🔮எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியாக தீர்த்துக்கொள்ள இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.

🔮இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு.

🔮தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி சென்னையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.


🔮அதிரடியாக தடுப்பணை கட்டும் கர்நாடகம் 4லட்சம் ஏக்கர் பாசனம் பாழாகும் என்று பரிதவிக்கும் தென்பெண்ணை விவசாயிகள்.

HEADLINES

🔮India vs West Indies: Rohit Sharma breaks Sanath Jayasuriya's 22-year-old record.

🔮Anna  University will not be controlled by the Central government even if it is awarded the Institute of Eminence (IoE) status.

🔮Unpleasant start to Olive Ridleys nesting season, five dead turtles washed ashore in Chennai.


🔮Pakistan violates ceasefire along LoC in Jammu and Kashmir’s Rajouri, Poonch